கொரணா தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தம்மிக்க பண்டார திட்டவட்டம்.

கொவிட் தடுப்பூசி ஏற்றியதாக வெளியான படம் தான் அல்ல தம்மிக்க பண்டார.

கோவிட் நோய்த் தொற்றை இல்லாதொழிக்கக்கூடிய பாணி மருந்து ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பண்டார ஊடகங்களில் கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து அண்மைக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தம்மிக்க பண்டார கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது போன்றதொரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

எனினும் தாம் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தம்மிக்க பண்டார திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமக்கு சேறு பூசும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி தாம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் பாணியை தயாரித்து வருவதாகவும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மருந்தை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி பற்றி எனக்கு நம்பிக்கை கிடையாது தடுப்பூசி பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.