யாழ்.போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவருக்குக் கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான ஐவரில் விசேட வைத்திய நிபுணரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொண்டை நோ, தலையிடி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட்ட நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணராகிய அவருடைய குடும்பத்தார் கொழும்பில் வசிக்கின்றனர்.

இந்தநிலையில், குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.