கொரானாவால் இறப்பவர்களது உடல்களை அடக்கம் செய்ய அரசு தொடங்கியது ….

கோவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது இதுவரை செய்யப்பட்டு வந்த நிலையில் , உடல்கள் இன்று முதல் அடக்கம் செய்யப்படும். தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு பின் கோவிட் காரணமாக இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

அதன்படி, இரண்டு உடல்கள் இன்று சுகாதார முறைப்படி முறையாக புதைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அந்த உடல்கள் இரண்டும் முஸ்லிம்களது என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பல உடல்களை அடக்கம் செய்ய தயாராகி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் இராணுவத்தின் கண்காணிப்பின் மத்தியில் அவ்வுடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது.

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள இரணதீவில் உடல்களை அடக்கம் செய்ய தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அங்கு வாழும் சமூகத்தின் எதிர்ப்பு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒட்டமாவாடி பகுதியில் ஒரு நிலம் முஸ்லிம்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.