முதன் முதலாக வடமாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிலக்கடலை அறுவடை நிகழ்வு.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பூந்தளிர் சுய உதவிக் குழுவானது தமது வாழ்வாதார செயற்பாட்டின் முதல் நிலக்கடலை அறுவடையினை வெற்றிகரமாக (10.03.2021) நேற்றைய தினம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.எம்.செட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் நிதியம் நிறுவனத்தின் வசதிப்படுத்துதலின் கீழ் வவுனியா ஓஹான் நிறுவனத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமுல்படுத்திய சமூகத்தினூடான புனர்வாழ்வு – II செயற்றிட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஒரு செயற்பாடாக இது காணப்படுகின்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்
ந.தசரதராஜகுமாரன் அவர்களும், மந்துவில் பிரதேச பங்குத்தந்தை அவர்களும், பூந்தளிர் சுய உதவிக்குழுவின் அங்கத்தவர்களும், ஓஹான் நிறுவன பணியாளர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.