யாழ். நகரில் ஹெரோயினுடன் ஒருவர் சிக்கினார்!

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது எனப் பொலிஸார் கூறினர்

உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.