டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் பாரிய தீ விபத்து.

இந்தியா தலைநகர் டெல்லியில் இருந்து தேஹ்ரடுன் நோக்கி சென்று கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவு காரணமாக பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

C-4 பெட்டியில் தீ பிடித்து பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உடனடியாக செயற்பட்ட மீட்புபணியாளர்கள் பயணிகள் அனைவரும் காயங்கள் எதுவும் ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.