வடக்கில் மேலும் 7 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 295 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 65 வயது வயோதிபர் ஒருவர் கொரோனாத் தொற்று அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னார் மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஐவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.