அசாத் சாலி சற்று முன்னர் CID யினரால் கைது

முன்னாள் ஆளுனர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபர் வழங்கிய இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பிலும் அவர் முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.