வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரணா நோயாளிகள் மூவர் பலி.

வங்காள தேசம் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த அதிக அழுத்தம் கொண்ட ஆக்ஸிஜன் கருவி இன்று காலை 8 மணியளவில் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் நஸ்மல் ஹக் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதும், அங்கிருந்து மற்ற நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட போது, 3 கொரோனா நோயாளிகள் பலியாகவிட்டதாகவும் கூறினார்.

அவர்கள் அனைவரும் கவலைக்கிடமான நிலையில், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.