நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக 197 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 322 பேரில் 197 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 58 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 பேர், இரத் தினபுரி மாவட்டத்தில் 10 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 08 பேர், காலி மாவட்டத்தில் 07 பேர் , கிளிநொச்சி மாவட்டங்களில் 07 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 06 பேர், களுத்துறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 05 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருணாகல், மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

கண்டி , முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 12 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொ விட-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.