அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்

இது குறித்து தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே இருந்ததால், போலீசார் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பவுல்டர் காவல்துறை அட்டார்னி மைக்கேல் டஹர்டி கூறுகையில், “இது மிகவும் வேதனை மிகுந்த நாள். தங்கள் அன்றாட ஷாப்பிங்கிற்காக வந்த பொதுமக்கள் இன்று உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்புக்கு நிச்சயம் நீதி கிடைக்க வழி செய்வோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.