ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்! – சஜித் வலியுறுத்து.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்! – நாடாளுமன்றில் சஜித் வலியுறுத்து.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தேவையேற்படின் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவில் நடைபெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பிரதான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணைக் குழுவின் அறிக்கையும் முழுமையாக வெளியிடப்பட்டது. செப்டெம்பர் 11 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை புத்தகக் கடைகளில்கூட வாங்கலாம்.

ஆனால், இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை. இணைப்புகள் மறைக்கப்படுகின்றன. சுயாதீன விசாரணை அரசியல் மயப்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்கமுடியாது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் என அனைவரையும் கண்டறிய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.