யாழில் 9 பேர் உட்பட வடக்கில் மேலும் 12 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 12 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 70 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த 6 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

அத்துடன், சண்டிலிப்பாய், ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை மருத்துவ அதிகாரிகள் பிரிவில் ஒவ்வொருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மூவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இவர்களில் இருவர் வவுனியா பொது வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வவுனியா தெற்கு மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.