வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி.

மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்டிருந்த வீட்டு திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட நிதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் கடன்பட்டு தங்களுடைய நகைகளை அடகு வைத்தும் வீடுகளை கட்டி முடித்திருந்தார்கள் சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின் அந்த மக்களுக்கான மீதி பணம் வழங்கப்படவில்லை.

அதனால் நிலுவையில் உள்ள பணத்தை வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.