யாழில் மேலும் 15 பேருக்குக் கொரோனா! – மரணமானவருக்கும் தொற்று உறுதி.

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனத் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர்.

யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொருவர் யாழ்ப்பாணம் மாநகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவிலில் வசிப்பவர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 71 வயதுடைய வயோதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வசிப்பவர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.