ஹெரோயின் போதை பொருளுடன் 6 இளைஞர்கள் கைது.

மட்டக்களப்பு நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 6 இளைஞர்களை நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நாற்கேணி, இருதயபுரம், ஊறணி ஆகிய பிரதேசங்களில் ஹரோயின் போதைப் பொருளுடன் குறித்த 6 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் குறித்த சந்தேக நபர்களினை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.