கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போதும் வட கொரியாவில், இதுவரை ஒருவருக்கு கூட தொற்று இல்லை.

உலக நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு இதுவரை ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ இருப்பினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.

கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளை உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.