மட்டு மாவட்டத்தில் ரக்பி விளையாட்டினை அறிமுகம் செய்ய நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டு துறையினை ஊக்குவிக்கும் முகமாக கடந்த காலங்களில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் மட்டு மாவட்டத்தில் ரக்பி விளையாட்டினை அறிமுகம் செய்ய வேண்டும் என்கின்ற சி.சந்திரகாந்தன் சிந்தனைக்கு அமைவாக மட்டு மாவட்டத்தில் பாடசாலை மட்டங்களில் கல்வி அமைச்சின் ஊடாக ரக்பி சம்மேளனதின் அனுசரணையுடன் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளினுடைய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் ரக்பி விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ரக்பி விளையாட்டு சம்மேளனதின் தலைவர் ரிஷ்லி இல்லியாஷ் உட்பட ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.