இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை.

சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே 10 நாட்களுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பானது கல்வியமைச்சால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் பணிகள் இன்றுடன் நிறைவுசெய்யப்பட்டு, சித்திரை புத்தாண்டு பண்டிகையின் பின்னர் வரும் 19ஆம தகதி முதல் மீண்டும் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது சுகாதார செயற்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படும் என்று கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.