மஹிந்த தலைமையிலான கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் பற்றி இறுதி முடிவு! மஹிந்தானந்த அளுத்கமகே

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்படும் எனவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைத் தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராக இருக்கின்றது. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துப் பங்காளிக் கட்சிகளும் பிரிந்து நின்று மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளப்போவதில்லை.

புதிய மாகாண சபை சட்டம் தொடர்பாக இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.