யாழில் மேலும் 13 பேருக்குக் கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் யாழ். மாவட்டத்தில் மேலும் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் ஆய்வு கூடத்தில் 386 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உட்பட 14 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடம் அடையாளம் காணப்பட்டார். அவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனையில் 11 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

மன்னார் மாவட்டத்திலும் ஒருவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. அவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.