சகல பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு!

இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

கடந்த 9ஆம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்கான சுகாதார வழிகாட்டியானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அந்த சுகாதார வழிகாட்டியின் அடிப்படையிலேயே இன்று சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலைகளின் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் குறித்த பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரைத் தொடர்புகொண்டு மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.