விமல்- வாசு – கம்மன்பில கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்

இன்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பல கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் நடுவே வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துறு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவா நானாயக்கரா ஆகிய 3 அமைச்சர்களே இப்படி வெளியேறி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சித் தலைவர்களைத் தவிர, வேறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

விமல் வீரவன்ச மற்றும் பல கட்சித் தலைவர்கள் ஆட்சியிலிருக்கும் பிரதான கட்சியான பொது சன பெரமுணவுடன் பல சந்தர்ப்பங்களில் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.