யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

இதில், திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.