இலங்கையில் இன்று மாத்திரம் 931 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 931 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் 99 ஆயிரத்து 653 பேருக்கு இதுவரையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 90 ஆயிரத்து 36 பேர் கொரோனாத் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.

அதேபோல், நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.