ஆவணி மாதத்திற்குள் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக மாறும்.

ஆவணி மாதத்திற்குள் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் மாறும் – தடுப்பூசி பணிக்குழு தலைவர்

பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் 2-வது அலையின்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த பிரிட்டன் தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தியது.

குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் , கொரோனா தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடத்தப்படுகிறது. பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும். இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதால், வரும் ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கும் என கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 6.6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பிரிட்டனில் தற்போது வரை 5 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை விரைவாக முடிப்பதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் கொரோனா ஆபத்து இல்லாத நாடாகப் பிரிட்டன் மாறும் என கிளைவ் டிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.