இந்தியப் பிரஜைகளின் சட்டவிரோத நுழைவு இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து.

இந்தியாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அண்மைய நாட்களில் இலங்கைக்கு நுழைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எச்சரித்துள்ளார்.

அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“மன்னார், புத்தளம் மற்றும் கொச்சிக்கடை ஆகிய கடல் பரப்பிலிருந்து படகுகள் மூலம் நாட்டுக்குள் நுழைந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேச வாசிகள் அறிவித்த பின்னரே அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் அறிந்திருக்கின்றார்கள்.

குறித்த தகவல் மக்களால் வழங்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக நுழைந்தவர்களைப் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தவோ, அவர்களை தனிமைப்படுத்தவோ அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.

கொரோனா தொடர்பான அனைத்து இறப்புகளுக்கும் தற்போதைய அரசு பொறுப்பேற்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பாக தகுந்த முடிவுகளை எடுக்கத் தவறிய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.