வடக்குக்குப் போதியளவு அனுப்பி வைக்கப்பட்டன பி.சி.ஆர். உபகரணங்கள்.

வடக்கு மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்குத் தேவையான முழுமையான உபகரணங்கள் சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும் பி.சி.ஆர். மாதிரிகளைச் சேகரிப்பதற்குரிய உபகரணங்கள் என்பன இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.