இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று!

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரின் சகோதரர் சந்தூஷ் வீரமனும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாத்தியா ஜயகொடியும் சந்தூஷ் வீரமனும் இரட்டையர்கள் ஆவர். இவர்கள் இணைந்து அதிகமான பாடல்களைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.