கத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.

முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலனிப்பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்

இதன்பின்னர் உடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படட நிலையில் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா இன்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் உடலத்தை பார்வையிட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்ட பின்னர் குறித்த நபருக்கு பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

இதன்படி பி சி ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லையெனில் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம்ஒப்படைக்கப்படும் தொற்று இனம்காணப்பட்டால் உரிய கொரோனா நடைமுறைக்கமைய தகனம் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்

சம்பவத்தில் உயிரிழந்தவர் சுதந்திரபுரம் கொலனி பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன் என்பவராவார்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிசார் கத்திக்குத்தை மேற்கொண்ட நபரை தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.