ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி

இன்று இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி

மின்னணு சேவை (E-Commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்க அனுமதி

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு காலத்தில் பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. – தமிழக அரசு அறிவிப்பு

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.

Leave A Reply

Your email address will not be published.