25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது.

எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11 மணி வரை நீக்க திட்டமிடப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 25 ஆம் திகதி வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய வீட்டுக்கு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாட்டினை மீறும் நபர்களை கைது செய்வதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.