யாழ். பொம்மைவெளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொம்மைவெளிப் பகுதியில் பிறிதொரு நபருக்குப் போதைப்பொருட்களைக் கைமாற்றும் செயற்பாட்டில் வீதியில் நின்றிருந்த வேளை கைதுசெய்யப்பட்டார் என்று யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

பொம்மைவெளிப் பகுதியில் பெருமளவில் போதைப்பொருள் நுகர்வு மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதால் அங்கு பொலிஸார் தமது சுற்றுக்காவல் கடமைகளை அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், வீதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த குறித்த நபரை பரிசோதித்த வேளை அவரது பையினுள் 3 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது என்றும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.