தமிழ் தேசிய கூட்டமைப்பு பொய் பேசி மக்களை ஏமாற்றுகிறது : கணேஸ்வரன் வேலாயுதம் (வீடியோ)

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தில் மூன்று உறுப்பினர்களை நாங்கள் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வோம். அதேவேளையில் நான் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயமாக பாராளுமன்ற சம்பளத்தைப் பெறப் போவதுமில்லை. சொகுசு வாகனப் பெமிட்டையும் எடுக்கப் போவதுமில்லை. அப்பணத்தைப் பெற்று பொது மக்களுக்காக செலவு செய்யப் போகின்றேன் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேடப்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

யாழ் கிளி நொச்சி தேர்தல் தோகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கிளைக்காரியாலம் திறப்பு விழா யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம். மரியசீலன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட முதன்மை வேடப்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் நாங்கள் மக்களுக்குச் சொந்த செலவில் சேவை செய்து விட்டு வந்து தான் தேர்தலில் நிற்கிறோம். ஆனால் மக்களுடைய வாக்குகளை எடுத்துச் சென்று சகல வரப்பிரகாசங்களையும் அனுபவித்துக் கொண்டு மக்களுக்கு எவையுமே செய்யாதவர்களுக்கு வாக்குகள் வழங்குவதில் எந்தப் பிரயோசனமுமில்லை. ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர்களுக்கு நீங்கள் இம்முறை நீங்கள் ஏமாந்து வாக்குகளை அளிக்க வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிழையானவர்களையும் தகுதியில்லாதவர்களையும் தான் தெரிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த தவறைத் தொடர்ந்து செய்யாதீர்கள்.

நான் இம்முறை பாராளுமன்றம் சென்றேன் எனில் அடுத்த முறை வந்து உங்களிடம் வாக்கு கேட்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஐந்து வருட காலத்தில் என்னால் பெரும்பணிகள் முடித்திருப்பேன். சமூக நலன்சார்ந்த விடயங்களில் அதிகம் கவனம் செலுத்தினால் மக்கள் எப்போதும் தன் பின்னாலேயே நிற்பார்கள். தேர்தல் வரும் மேடைகளில் ஏறாமல் வீட்டில் இருந்த வாறு பதவியைப் பெற்றுக் கொள்வேன். யாழ் மக்கள் அவ்வளவு நன்றி மறந்த மக்கள் அல்ல. நான் தனிப்பட்ட ரீதியில் செய்த சமூகம் நலன் சார்ந்த சேவைக்காக மக்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவு என்னை வெற்றியை உறுதி செய்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது, அவர்கள் நன்றி மறவாத மக்கள். எதிர் வரும் பொதுத் தேர்தலில் நான் வீடு விடாக அலைய வேண்டியதில்லை. எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தவாறே என்னுடைய வெற்றியை உறுதி செய்வேன்.
ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டிருந்த இனவாதக் கட்சிகள் எல்லாம் வெளியேறி விட்டதாகவும் சஜித் அணியில் தான் இனவாதக் கட்சிகள் உள்ளன என்று கூறுகின்றனர். உண்மையிலேயே இன்னும் அந்தப் பக்கம் தான் ரஞ்சன் ராமநாயக, தயாகமகே போன்ற இனவாதக் கருத்துக்களை உடையவர் இருக்கின்றனர்.

தமிழ் கூட்டமைப்பு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று பல சாக்குப் போக்குகளைச் சொல்லி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். ரணில் தர விரும்பும் போது மைத்திரி விட வில்லை என்றெல்லாம் கூறி இன்று மக்களை மடையளர்களாக ஆக்கி வைத்துள்ளார்கள். காலம் காலமாக உங்கள் கை விரல்களால் உங்கள் கண்களைக் குத்திக் கொள்ளாமல் நியாமாக சிந்தித்து மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வேட்பாளர்களை அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

– இக்பால் அலி

Comments are closed.