பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் துணிச்சலுடன் நேரடியாக புகார்!

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபாலன்.

இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு மாணவிகள் நேரடியாக ராஜகோபாலன் மீது புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் 3 மாணவிகள் துணிச்சலுடன் காவல்துறையில் நேரடியாக புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ராஜகோபாலன் மேலும் பலர் புகார் கொடுக்க வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.