மானிப்பாயில் 11 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

யாழ். மானிப்பாய் பகுதியில் 11லீற்றர் கசிப்பைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சண்டிலிப்பாய், ஆழங்குடா பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சங்கானைப் பகுதியிலுள்ள வீடு ஒன்றினுள் கசிப்பை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றார் எனக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்ததுடன் பதுக்கி வைத்திருந்த 11 லீற்றர் கசிப்பையும் கைப்பற்றினர்.

பயணக் கட்டுப்பாடு காரணமாக மதுபானசாலைகள் நாடு பூராகவும் மூடப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி மற்றும் கலப்பட சாராய உற்பத்தி என்பன அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.