புதுக்குடியிருப்பு குண்டு வெடிப்பு! பெண்ணொருவர் காயம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 41 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:-

தனது காணியில் இருக்கின்ற பனை மரத்துக்கு அருகாமையில் குப்பைகளைக் கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்த வேளையில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்துள்ளது. இதையடுத்து குறித்த பெண் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.