யாழ். போதனா வைத்தியசாலையில் திருடப்பட்ட தொலைபேசிகள்: பொலிஸின் விசேட அறிவிப்பு.

யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் திருடப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த மாதம் 24ஆம் திகதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எனினும், அவற்றில இரண்டு கைத்தொலைபேசிகள் தொடர்பில் மட்டுமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவைகள் உரியவர்களிடம் நீதிமன்றம் மூலம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏனைய 5 தொலைபேசிகள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே, குறித்த தொலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு குறித்த அறிவித்தல் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாத காலங்களுக்கு உட்பட்ட காலப்பகுதிகளில் பெரும்பாலும் யாழ். போதனா வைத்திசாலையின் 21ஆம் மற்றும் 24ஆம் நோயாளர்கள் விடுதிகளிலே குறித்த தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இவைகள் அதிகமாக வைத்தியசாலை பணியாளர்களுடையவை என ப் பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட தொலைபேசிகள் சான்ஸ்சங் மற்றும் குவாவி தரத்தை உடையவை எனவும், இவ்வாறு தொலைக்கப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறும் பொறுப்பதிகாரியால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.