அரசாா்பற்ற நிறுவனங்களின் இணையம்- Covid-19 பேரிடர்கால அவசர உதவித்திட்டம்.

யாழ்மாவட்ட அரசாா்பற்ற நிறுவனங்களின் இணையம்- Covid-19 பேரிடர்கால அவசர உதவித்திட்டம்.

Covid-19 தொற்றிடர் 3வது அலையின் காரணமாக பயணத்தடையால் வாழ்வாதாரம் நலிவுற்ற 1500 குடும்பங்களுக்கான தலா 1500 /= பெறுமதியான 1500 உலர் உணவுப் பொதிகள் யாழ்மாவட்ட அரசாா்பற்ற நிறுவனங்களின் இணையத்தினால் சகல பிரதேச செயலகங்களுக்கும் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் உத்தியோகபூா்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மற்றும் யாழ்மாவட்ட அரசாா்பற்ற நிறுவனங்களின் இணைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.