அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா? – கெஹலிய பதில்.

“அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கே இருக்கின்றது. தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்படும்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதேபோல்பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பிலும் இறுதி முடிவு இதுவரை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரே உரிய அறிவிப்பை விடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.