கோண்டாவிலில் வன்முறைக் கும்பல் அட்டூழியம் 4 பேர் படுகாயம்; துண்டாடப்பட்டது ஒருவரின் கை.

யாழ்ப்பாணம்; கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சாலைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் கூறினர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.

சம்பவத்தில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வன்முறையில் படுகாயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.