ஓரினச் சோ்க்கை விவகாரம் : உயா்நீதிமன்றம் உத்தரவு

ஓரினச் சோ்க்கை வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்களை தொந்தரவு செய்யக்கூடாது என நாமக்கல் போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவில், நானும் எனது நெருங்கிய தோழியும் காதலிக்கிறோம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த எனது பெற்றோா்கள் எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தனா். இதற்கு சம்மதம் தெரிவிக்காத என்னை ஆணவக் கொலை செய்ய கூட முயற்சித்தனா். இதனால் வீட்டை விட்டு வெளியேறி நானும் எனது தோழியும் தனியாக வசித்து வருகிறோம். எனது தோழி மீது நடவடிக்கை எடுக்க கோரி எனது அண்ணன் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரை காவல்துறையினா் தொந்தரவு செய்யக்கூடாது. அவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓரினச்சோ்க்கையாளா் தொடா்பாக ஏற்கெனவே உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.