மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவை இறக்குமதி.

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் அதிக விலைக்கு குறித்த பொருட்களை விற்பனை செய்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் மைசூர் பருப்பை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.