முல்லைத்தீவு கடற்கரையில் கரைஒதுங்கிய புள்ளிச்சுறா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் வடக்கு கடற்கரைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளிச்சுறா ஒன்று கரைஒதுங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மீனவர்களினால் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.

அரிய வகை கடல்வாழ் உயிரினமான புள்ளிச் சுறா வலையில் சிக்கினால் அதனை மீளவும் கடலில் விடுகின்ற வழக்கத்தை மீனவர்கள் கொண்டிருக்கின்றனர்.இது போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வலையில் சிக்கிய புள்ளிச்சுறாவினை மீனவர்கள் மீண்டும் கடலினுள் திருப்பி அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.