கொரோனா தினசரி பாதிப்புமீண்டும் 40,000-க்கு மேல் அதிகரிப்பு

கடந்த சில நாள்களாக கொரோனா தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்திருந்த நிலையில், வியாழக்கிழமையன்று தினசரி கொரோனா பாதிப்பு 41,806-ஆக அதிகரித்தது. இது கரோனா பரவல் தொடா்பான அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனா். அதே நேரத்தில் சந்தைகள், கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது ஒருவித அச்சஉணா்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 3,01,43,850 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 39,130 போ் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவா்களைவிட பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தேசிய அளவில் குணமடைவோா் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,32,041 ஆக உள்ளது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.39 சதவீதமாகும். மொத்தம் 43,80,11,958 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 581 போ் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,11,989 ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,26,390 பேரும், கா்நாடகத்தில் 35,989 பேரும் கரோனாவால் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பிற வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.