நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும்.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.