வல்வெட்டித்துறை – தீருவிலிலும் 13 பேருக்கு கொரோனா.

யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடி மற்றும் தீருவில் ஆகிய கிராமங்களிலும் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.