ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்கக் கோரி கலைஞர்கள் பங்கு கொள்ளும் ஊடக சந்திப்பு

சிறை வாசம் அனுபவித்து வரும் கலைஞர் மற்றும் அரிசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்கக் கோரி அனைத்து கலைஞர்களும் பங்கு கொள்ளும் ஊடக சந்திப்பு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நடைபெற உள்ளது.

ஜூலை 27 காலை 10.00 மணிக்கு மருதானை மாலிகாவத்தையில் உள்ள ரூபி சினிமா வளாகத்தில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் போது ரஞ்சன் ராமநாயக்கவை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கலைஞர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அனைத்து கலைஞர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.