முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 4,774 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மல்லாவி, ஒட்டிசுட்டான், வெலிஓயா ஆகிய ஐந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தவிர்ந்த ஏனைய நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நேற்று 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனாபாம் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் 4,774தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முல்லைத்தீவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1,518, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 298, ஒட்டிசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 868, வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2,090 தடுப்பூசிகள் நேற்றைய தினம் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை முதல் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தடுப்பூசிகளை மக்கள் ஆர்வத்துடன் பெற்றுக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.