டயகம சிறுமி இஷானியின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

டயகம சிறுமி இஷானியின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டு பேராதனை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நீதிமன்ற அனுமதியுடன் இன்று சிறுமி இஷாலினியின் உடலம், டயகம மயானத்தில் இருந்து இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது.

ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைக்கு மேலதிகமாக இரண்டாவது பரிசோதனையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இதன்படி பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலினியின் உடலம் இன்று பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மீள பிரேத பரிசோதனகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம் முன்னிலையில் உடலம் தோண்டப்பட்டது.

இதன்போது ஊர் மக்கள் கூடியிருந்ததுடன், டயகம நகரில் இருந்தே பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.